Saturday, September 28, 2013

இதயம் உன்னிடத்தில்


காலங்கள் கடந்தபோதும்
காதல் மட்டும் உன்னிடத்தில்

கவிதை எழுதியபோதும்
கற்பனை மட்டும் உன்னிடத்தில்

உதடுகள் அசைந்த போதும்
உள்ளம் மட்டும் உன்னிடத்தில்

கண்கள் உறங்கிய போதும்
கனவுகள் மட்டும் உன்னிடத்தில்

நான் இறக்கும் போதும்
என் இதயம் மட்டும் உன்னிடத்தில்....

No comments:

Post a Comment