நினைந்தும் நினையாமல் ... மறந்தும்
மறவாமல் ... சிரித்தும்
சிரியாமல் .. அழுதும்
அழாமல் .. நித்தம்
இறந்தும் இறவாமல் இருக்க
... உன்னாலும்என்னாலும் மட்டும்
முடிகின்றது... எனக்கு
நீ இல்லை .. உனக்கு
நான் இல்லை என்று
தெரிந்தும்.
என் உயிர் நண்பர்களே ...! என் இறுதியாசையை நீங்கள் தான் .. நிறைவேற்றி வைக்கவேண்டும் ...? நான் இறந்தால் என் உடலைப்புதைத்து விடுங்கள் ! மறந்தும் எரித்து விடாதீர்கள் நெருப்பின் சூட்டில் துடிதுடித்து விடபோகிறது என்னவளின் நினைவுகள்...! இது என் இறுதி வேண்டுகோள்...! புதைகுழிக்குள் இருந்தும் என்னவளை .. நான் நினைக்க வேண்டும்.....!!