Sunday, January 6, 2013

என் காதலியே



*எப்படியும் ஒரு நாள்
என்னை ஏமாற்றி விடுவாய்
என்று தெரிந்தே
உன்னை காதலித்தேன்.
ஆனால்
என்றாவது ஒருநாள்
என்னை காதலிப்பாய்
என்று நினைத்து நினைத்துதான்
ஏமாந்து போனேன்.

என் காதலின் ஏமாற்றம்


*என் வாழ்வில் இந்த நொடி பொழுது வரை
உன்னை மறக்கத்தான் முயற்சிக்கிறேன்.
உன்னை மறப்பதாக எண்ணி மீண்டும் மீண்டும்
உன்னை அதிகமாக காதலித்து என்னையே
நான் ஏமாற்றி கொள்கிறேன்.
வேடிக்கையாக இருக்கிறதா?
ஆனால் அந்த ஏமாற்றத்திலும்
தோன்றும் காதலை நான் அதிகமாக காதலிக்கிறேன்.
ஏனெனில் அந்த ஒற்றை காதலுக்கு
என்றுமே பிரிவுஇல்லை என்பதால் தான்.

உன் மௌனம்


*உன்னை மறப்பதற்கு
நான் செய்யாதது எதுவும் இல்லை
ஆனால்
உன்னை நான் நினைத்திருக்க
நீ தந்தது உன் மௌனம் மட்டுமே..!!

உண்மை காதல்


*உருகி உருகி காதலித்தேன் ...!
உதடு வலிக்காமல் சொல்லிவிட்டாள்  --
வேண்டாம் என்று ...
 உள்ளம் வலிக்குதடி உண்மையான
காதலோடு உன் விழிகளை
பார்க்கையில்....!

உறைந்து போன என் காதல்


*தேர்வுக்கு தயாராகும் மாணவன் போல்
இன்று,நாளை,நாளை மறுநாள் என்று
காலம் கடத்துகிறேன் என் காதலை சொல்ல
சொல்வதற்கு வார்த்தை இல்லை என்று
தமிழ் மீது பழி போடுகிறேன்
சொல்ல தைரியமற்ற கோழை ஆனதால்
நாட்கள் வாரங்கள் வருடங்கள் என
என் காதல் செடி தன் கனவு
வேர்களில் கால் ஊன்றி மரமாகி விட்டது
காரணங்கள் பல சொல்லி என்
மனம் என்னை தேற்றுகிறது
இன்றளவும் என் காதலை
உன்னிடம் சொல்வதற்கு தயங்குகிறேன்
தயங்கி தயங்கி ஏனோ என் காதல்
ஒரு தலை காதலாகவே நெஞ்சின்
ஓரத்தில் உறைந்தே போய் விட்டது
உறைந்து போனது என் காதல் மட்டுமல்ல
என் உயிரும் தான்....

காதலின் தவிப்பு


*இல்லை என்று தெரிந்தும்
துடிகின்றது மனம்!
வேண்டும் என்று.......
கற்பனை என்று தெரிந்தும்
துடிகின்றது கண்கள்!
காண வேண்டும் என்று.......
பொய் என்று தெரிந்தும்
துடிகின்றது வார்த்தைகள்!
பேச வேண்டும் என்று.......
நான் என்று தெரிந்தும்
துடிகின்றது இதயம்!
நீ என்று தான்...

ஒரு தலை காதல்


*தூரத்தில் அவளின் பார்வை பட்டாலே சந்தோஷத்தில் உடைந்து போகும் இதயம்!
தைரியம் இருந்தும் அவளிடம் பேச போகும் பொழுது மட்டும் உதடுகளின் வேலை நிறுத்தம்!
இரவை தொலைத்து கூட தெரியாமல் அவளின் நினைவில் வாழும் உள்ளம்!
அவளுடன் வாழ துடிக்கும் இதயம், அவள் அருகில் வந்தால் மட்டும் அஞ்சுகின்ற அவலம்!
அவள் வரும் நேரம் மட்டும் நத்தையின்மீதேறி வரும்!
அவள் கடக்கும் நேரம் மட்டும் மின்னலை பிடித்து செல்லும்!
இவ்வுலகத்தில் ஒரு நொடியில் ஒரு ஜென்ம சந்தோஷம்!
ஒரு நொடியில் அவளுடன் வாழ்ந்தாலே போதுமென துடிக்கும் இதயம்!
இவை அனைத்தையும் நிகழ்த்துவது இந்த
ஒரு தலை காதல் மட்டுமே!

பேசாத நிமிடங்கள்


*மறக்க
நினைக்கிறேன்
உன்னை
அல்ல,
உன்னிடம்
பேசாமல்
விட்ட அந்த
நிமிடங்களை!!!

என் காதல்


*நான் உன்மீதுகொண்ட காதல்
உன்னை சுற்றி உள்ளவர்களுக்கெல்லாம்
தெரிந்து விட்டது.
உன்னை தவிர!!!!

மறக்க மறந்தேன்


*மறக்க வேண்டும் என்று தான் நினைப்பேன்
அவளை பார்க்கும் வரை...
ஆனால்,
அதை கூட மறந்து விடுகிறேன்,
அவளை பார்க்கும் போது!!!!

தனிமையை தேடி


*தனிமையில் இருக்க முயற்சிக்கிறேன்.
முடியவில்லை..
என்றுமே என்னுடன் அவள் நினைவுகள் இருப்பதால்.

எதிர்பார்த்து விடாதே


*இவ் உலகில் யாரையும் எல்லை
மீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்
வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே:(:(:(

கனவிலும் ஏமாற்றம்


*விழிகளை மூடினேன்
உறங்குவதற்காக் அல்ல
உன்னை காண்பதற்காக
அதிலும் எனக்கு
ஏமாற்றம் தான் தந்தாய்!!!

எனது ஆசை


*கண் சிமிட்டாமல் உன்னை பார்க்க ஆசைப் பட்டேன்.
ஆனால்,
இப்போது உன்னை கண் சிமிட்டும் நேரமாவது பார்க்க ஆசை படுகிறேன்!!!

கலைத்து விடாதீர்கள்..


*கனவுகளுக்கு எச்சரிக்கை...
கனவில் வந்த காதலி
அவளாகசென்று
எனக்கு நினைவு திரும்பும்வரை..
கலைத்து விடாதீர்கள்..
எங்கள் கனவுகளையும்....
காதலையும்.......

எப்படி மறப்பது


*என்னை வெறுத்த அவளையே மறக்க முடியாத போது
நான் விரும்பிய அவளை என்னால் எப்படி
மறக்க முடியும்?

என் காதல்


*நான் உன்னை
ஆயிரம் முறை
பார்த்திருந்தாலும்
நீ என்னைப் பார்த்த
அந்த நொடியில் தான்
விதையாய் விழுந்தது
என் காதல்....!

நான் உன் பெயரை
கோடி முறை
ஜெபித்திருந்தாலும்
நீ என் பேர் சொன்ன
அந்த நொடியில் தான்
முதல் பூ பூத்தது
என் காதல்....!

நான் உன்னிடம்
கனவிலும் நினைவிலும்
பேசியிருந்தாலும்
நீ என்னிடம் பேசிய
அந்த நொடியில் தான்
கனிந்து கசிந்தது
என் காதல்.....!

நான் உன்னையே
உயிராய், வாழ்வாய்
எண்ணியிருந்தாலும்
நீ உன்னவனை  காட்டிய
அந்த நொடியில் தான்
'நம் காதல்' ஆகாமலே
சருகாகிப் போனது
என் காதல்.....!

மறவாத நினைவுகள்


*மறக்க சொல்கிறாய் எதை மறப்பது
உன்னுள் தொலைந்த என்னையா...
இல்லை என்னுள் தொலையாமல் இருக்கும்
உன் நினைவுகளையா....

காதல் வார்த்தைகள்


*நினைத்துப் பார்த்தேன்
கண்ணீராய்ச் சிதறின....!!
அவளுடன் பேச நினைத்த
அந்தக் காதல் வார்த்தைகள்....!!

உன் வருகை..


*நீ
வரும் போது
சின்னச் சின்னதாய்
கிடைக்கிற
சந்தோசங்களை
எல்லாம்
ஒட்டுமொத்தமாய்
அள்ளிக் கொண்டு
போகிறாய்
போகும்போது...

மறப்பதற்கு மனமில்லையே


*மறக்க
வேண்டுமென்றுமீண்டும்
அதையேதான்
நினைக்கிறேன்.
மறக்க
முடியவில்லைஎன்பதை
விட
மறப்பதற்கு
மனமில்லை
என்பதுதான்
உண்மை!!!

தவறு


*நான் செய்த ஒரே தவறு
நீ செய்தது எல்லாம்
எனக்காக என்று
நினைத்தது மட்டுமே.

காத்திருப்பின் வலி


*காதலை சொல்லியும்
பதில் சொல்லாத
போது தான்
ஒவ்வொரு நிமிடமும்
இதயம் உடைந்து போகிறது.

காதலின் பதில்

*பெண்ணே...
சுலபமாக நீ
சொல்லிவிட்டாய்
என்னிடம்...
உன்னை எனக்கு
பிடிக்கவில்லை  என்று...
பதில் சொல்ல
முயன்றேன் உன்னிடம்...
வார்த்தைகள் இருந்தும்
இதழ்கள் திறக்க முடியாமல்...
தோற்றது என் இதழ்கள்...
சொல்லியது பதிலாக
என் கண்ணீர்...
உன்னிடம்.....

விதியின் வஞ்சனை,...


*பெண்ணே...
உன் வார்த்தை என்னும்
புயல் என்னை தாக்கினாலும்...
உன்னில் நான் கொண்ட
என் காதல் மட்டும்...
சாயாதடி மண்ணில்...
என் மரணம் வரை.....
உன்னை பார்த்த முதல் கணமே,
உன் அனுமதியின்றி காதல் செய்தேன் ...
உன் மீன் போன்ற விழிகளால் வலை
விரிக்கப்பட்டு ,வீழ்த்தப்பட்டேன்...
உன்னை காணுவதற்காக என் கால்களை வேலை வாங்கினேன் ...
இமை மூட பயந்தேன் , .
நிமிடங்களை கணக்கிட்டு செலவு செய்தேன்...
உன்னை பார்த்த நிமிடங்களை ,
பொக்கிஷமாய் நெஞ்சில் புதைத்தேன்..
உன்னை காணாத நொடிகளை,
 நகர்த்த முயற்சி செய்தேன்...
உன் முன் மௌனமாகும் உதடுகளை விட்டு,
கண்கள் மூலம் காதலை சொல்ல முயன்றேன் ...
என் காதல் உனக்கு புரிந்ததா? இல்லையா?
 என்று எண்ணி நித்திரை தொலைத்தேன் ..
நிஜங்களை வெறுத்தேன், கனவுகளை நம்பினேன்..
இப்படி உன்னால் உண்ணாமல் திரிந்தேன்,
உன்னில் உயிராக வாழ ...
உன்னை விட்டு பிரிய போகிறேன்
உன் அனுமதியின்றி கண்ணீருடன் ,
உன் நினைவுகளை உன்னிடம் கடனாக பெற்று..
காரணம் கேட்காதே ...
இது விதியின் வஞ்சனை,...

உன்னை நினைத்து..


*படுக்கும்போதும்
உறங்கமறுத்து
உன்னையே நினைக்கிறேன்!-அந்த
காதலே இல்லையென
மறுத்தபோதும்
உன்னை மறக்காமல்
நான்
தவிக்கிறேன்!




என் காதலே..!


*உன்னிடம் நான் பேசியது இல்லை என்றாலும்..
உன்னைப்பற்றி அதிகமாகவே
பேசிக்கொண்டிருக்கிறேன் மற்றவர்களிடம்
உன்னை மறந்துவிடக்கூடாது
என்பதற்காக..!

எப்படி வந்தாய்..?!


*காதலுக்கு கள்ளத்தனம்
தெரியாது என்கிறாய்
பிறகு எப்படி?
என் இதய அறையின்
எல்லா கதவுகளையும்
பூட்டியபின்பும்
எனக்குள் வந்தாய்....?!