Saturday, September 28, 2013

காதலியின் திருமணம்

நீ ஈந்த நினைவுகளின்
நீர்ச்சுழியில்
சிக்கி இன்னும் மீளாமல்
சாகின்றேன்,
கடந்துசெல்லும் பொழுதுகளின்
பொறிகளுக்குள்
தொலைகின்றேன்
உன் வருகை தேடியே...
மணமுடித்த சேதிதனை
கேள்வியுற்று
பிணமாக ஆகிப்போவேன்
விரைவினிலே,
எனக்கில்லை
நீயென்று ஆனபின்பு
இருந்தென்ன செத்தென்ன


கண்ணாக கரம் பிடித்த
கணவனுன்னை
கலங்காது காத்திடவும்
வரம்வேண்டி,
கோரிக்கை கொண்டுசெல்வேன்
இறைவனிடம்
காணிக்கை என் உயிர்
சில நொடியில்...

No comments:

Post a Comment