Sunday, July 28, 2013

காதல் தாகம்

தெளிந்த நீரில் உன் முகம்..
எனக்கோ உயிர் போகும் தாகம்...
கைபட்டால் கலைந்திடுமோ என்ற பயம்...!

போகட்டும் உயிர்... உன் முகத்தை பார்த்துகொண்டே...

காத்திருப்பேன்

நீ மட்டும் என் கனவில் வருவதாய் இருந்தால்
காலம் முழுதும் கண்களை மூடி

காத்திருப்பேன் உனக்காக....

காதல் தோல்வி

அவள் முகத்தை பார்க்காமல் செல்கிறேன்
அவளை பிடிக்காமல் அல்ல
அவள் என்னை பார்க்காமல் செல்வதை

பார்க்க முடியாமல்....

முதல் காதல்

அவளை நேசிக்க ஆரம்பித்த நிமிடம் எனக்கு தெரியாது

ஆனால் இனி நான் வாழ போகும் காலம் முழுதும் அவளை நேசிக்க மட்டுமே.....

என் இதயத்தை திருடியவள்

அடையாளம் தெரிந்தாலும் காட்டி கொடுக்க முடியவில்லை

என் இதயத்தை திருடியவள் அவள் தான் என்று...!

Saturday, July 27, 2013

முதல் காதல்

முதல் பார்வை
முதல் சிரிப்பு
முதல் அன்பு
முதல் நட்பு
முதல் உணர்வு
முதல் மௌனம்
முதல் காதல்
முதல் தேடல்
முதல் ஊடல்
முதல் பிரிவு
முதல் அழுகை
முதல் தோல்வி
முதல் தனிமை
உன்னிடம் தான்
என் முதலும் முடிவும்
நீயே என் உயிரே!

உன்னோடு சில காலம்

உன்னோடு சில காலம்
அதன் நினைவோடு பல காலம்.............

உன்னை சந்தித்த சில நாட்களிலேயே
என்னுயிரில் நீ விதைத்தாய் உன் நினைவுகளை ,

நீ விதைத்தது என்னுள் வளர்ந்தது காதலாய்
கனவென்னும் பூக்களை சுமந்தபடியே ,


இன்று வரை காத்திருகின்றன
நீ என்னுள் விதைத்த கனவுப்பூக்கள் ,
அதன் மணத்தை என்றாவது
உன் இதயம் உணரும் என நம்பி .....!

என்ன பயன் ,
என்னுள் விதைக்கப்பட்ட நீ
எனக்கே விதிக்கப்பட்டவள்
என்றெண்ணியபடியே பூக்கும்
அந்த கனவுகளுக்கு
எப்படி புரிய வைப்பேன் 

நீ என்னுடையவள் இல்லை என்று......

உன் நினைவில் நான்

உன் நினைவில் நான் ...
உன்னோடு
இருந்தபொழுதுகள்
கண்ணோடு கலந்து
கண்ணீராக வலியுடன்
வதைத்து கொல்கிறது

உனக்காக எழுதிய
காதல் கவிதைகளை
பார்க்கிறேன்
படிக்கமுடியவில்லை
படிப்பதற்குள் - என்
கண்ணீர்துளிகள்
நனைத்துவிட்டது

நீ
பரிசாக கொடுத்த
கண்ணீர்த்துளியை
என் இமைக்குள்
புதைத்துக் கொண்டு
விழியிழந்தவனாகிறேன்

உன் பெயரை
அடிக்கடி சொல்லி
பார்த்தேன் -உன்னை
அழைப்பதற்கு அல்ல
என்னுயிர்
என்னிடம்தான்
இருக்கிறதா என்று
பார்ப்பதற்கு ...

என் காதல்

அவளை
காதலிக்கும்
போது
எவளையுமே
பிடிக்கவில்லை..!
ஆனால்...
அவள் போன
பிறகு
காதலிக்கவே
பிடிக்கவில்லை..!

ஞாபகம்

உன்னால்
அலட்சியமாய் தூக்கி எறியப்பட்ட
மிட்டாய் காகிதங்கள் கூட
என் அலமாரிக்குள்
பத்திரமாய் இருக்கும் போது.
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது
என்னையே தூக்கி எறிய....


ஆண்களின் மரணம்

காதல் ஆயுதம் கொண்டு
பெண்களால் கொலை செய்யப்படும்
ஆண்களின் மரணத்திற்கு பெயர்

தற்கொலை.

தோல்வி

*இழந்துவிட்டதால்
இழந்து கொண்டே
இருக்கிறேன் கண்ணீரை...
உதிர்ந்துவிட்டால்
என்றும் உதிராமல்

இருப்பேன் உன் இதயத்தில் ....!