Sunday, January 6, 2013

உறைந்து போன என் காதல்


*தேர்வுக்கு தயாராகும் மாணவன் போல்
இன்று,நாளை,நாளை மறுநாள் என்று
காலம் கடத்துகிறேன் என் காதலை சொல்ல
சொல்வதற்கு வார்த்தை இல்லை என்று
தமிழ் மீது பழி போடுகிறேன்
சொல்ல தைரியமற்ற கோழை ஆனதால்
நாட்கள் வாரங்கள் வருடங்கள் என
என் காதல் செடி தன் கனவு
வேர்களில் கால் ஊன்றி மரமாகி விட்டது
காரணங்கள் பல சொல்லி என்
மனம் என்னை தேற்றுகிறது
இன்றளவும் என் காதலை
உன்னிடம் சொல்வதற்கு தயங்குகிறேன்
தயங்கி தயங்கி ஏனோ என் காதல்
ஒரு தலை காதலாகவே நெஞ்சின்
ஓரத்தில் உறைந்தே போய் விட்டது
உறைந்து போனது என் காதல் மட்டுமல்ல
என் உயிரும் தான்....

No comments:

Post a Comment