*நான் உன்னை
ஆயிரம்
முறை
பார்த்திருந்தாலும்
நீ
என்னைப் பார்த்த
அந்த
நொடியில் தான்
விதையாய்
விழுந்தது
என்
காதல்....!
நான் உன்
பெயரை
கோடி
முறை
ஜெபித்திருந்தாலும்
நீ என்
பேர் சொன்ன
அந்த
நொடியில் தான்
முதல் பூ
பூத்தது
என்
காதல்....!
நான்
உன்னிடம்
கனவிலும்
நினைவிலும்
பேசியிருந்தாலும்
நீ
என்னிடம் பேசிய
அந்த
நொடியில் தான்
கனிந்து
கசிந்தது
என்
காதல்.....!
நான்
உன்னையே
உயிராய், வாழ்வாய்
எண்ணியிருந்தாலும்
நீ
உன்னவனை காட்டிய
அந்த
நொடியில் தான்
'நம் காதல்' ஆகாமலே
சருகாகிப்
போனது
என்
காதல்.....!
No comments:
Post a Comment