Saturday, July 27, 2013

உன்னோடு சில காலம்

உன்னோடு சில காலம்
அதன் நினைவோடு பல காலம்.............

உன்னை சந்தித்த சில நாட்களிலேயே
என்னுயிரில் நீ விதைத்தாய் உன் நினைவுகளை ,

நீ விதைத்தது என்னுள் வளர்ந்தது காதலாய்
கனவென்னும் பூக்களை சுமந்தபடியே ,


இன்று வரை காத்திருகின்றன
நீ என்னுள் விதைத்த கனவுப்பூக்கள் ,
அதன் மணத்தை என்றாவது
உன் இதயம் உணரும் என நம்பி .....!

என்ன பயன் ,
என்னுள் விதைக்கப்பட்ட நீ
எனக்கே விதிக்கப்பட்டவள்
என்றெண்ணியபடியே பூக்கும்
அந்த கனவுகளுக்கு
எப்படி புரிய வைப்பேன் 

நீ என்னுடையவள் இல்லை என்று......

No comments:

Post a Comment