காதல் கவிதைகள்
Sunday, September 29, 2013
கண்ணீர்
ஆயிரம் அடி தோண்டியும் கிடைக்காத தண்ணீர்
ஒரு அடி அவள் என்னை விட்டு விலகியதும் உருவானது
என் கண்ணில்..!
Saturday, September 28, 2013
அவள் மௌனத்தால்
அவள் என் கல்லறையில் மௌன அஞ்சலி செலுத்துகிறாள்
பாவம் அவளுக்கு தெரியவில்லை
நான் இறந்தே அவள் மௌனத்தால் தான் என்று...!
என் நினைவுகள்
அவள் என்னை பற்றி நினைப்பதற்கு எதுவுமில்லை
என்பதையும் சேர்த்து மறப்பதற்கு என்னிடம் ஏராளமாக இருக்கின்றது...
என் மரணம்
அன்று அவள் மட்டும் என்னை பார்த்து சிரிக்காமல் இருந்திருந்தால்
இன்று யாரும் அழுது கொண்டிருக்க மாட்டார்கள்
என் கல்லறையில்...
நீ மட்டும்
தொடும் தூரம் என நினைக்கும் வானம் நீ
உன்னை தொடவும் முடியவில்லை
தொடரவும் முடியவில்லை...
ஆனால் நீ மட்டும் எப்படி தொடர்ந்து கொண்டிருக்கிறாய்
என் நினைவுகளாய்....
காதல் தோல்வி
காற்றை தேடி சென்றேன்
பிடிக்க முடியவில்லை
அன்பை தேடி பழகுகிறேன்
அமையவில்லை..
ஆசையை அறவே மறக்கிறேன்
முடியவில்லை..
அழகை தேடி தொலைத்தேன்
ஏற்கவில்லை..
உன்னை நினைத்தேன்
விழிகள் மூடவில்லை...!
உன் நினைவுகள்
நொடிக்கு நொடி நினைக்கும் உன்னை
மறப்பது எப்படி என்று தெரியாமல்தான்
உறங்குகிறேன் இந்த கல்லறையில்..
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)